மும்பை அபார வெற்றி., பிளே ஆப் தகுதியை இழந்த ராஜஸ்தான்..!

மும்பை அணி 8.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது . ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் பின் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மும்பை அணியில் சிறப்பாக நாதன் குல்டர் நைல் 4, ஜேம்ஸ் நீஷம் 3, ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

91 ரன்கள் இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரராக வீரர்களாக இஷன் கிஷன், ரோஹித் இருவரும் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த ரோகித் 22 ரன்னில்  விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 3 பவுண்டரி என மொத்தம் 13 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களம் கண்ட இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசி கடைசிவரை 50* ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இறுதியாக மும்பை அணி 8.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனால் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் எடுத்து மும்பை 5-ஆம் இடத்திற்கு முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியை தழுவியதால் ராஜஸ்தான் பிளே ஆப் தகுதியை இழந்தது.

author avatar
murugan