நாக்பூரிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றதால் வியாழக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.குழுவினரும் நோயாளியும் பாதிப்பில்லாமல் தப்பினர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா நோயாளிகளை உடனடியாக பிற மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,சி -90 விடி-ஜில் என்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நாக்பூரில் இருந்து கொரோனா நோயாளியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றிக் கொண்டு ஹைதராபாத்துக்கு புறப்பட்டது.
இதனையடுத்து விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் விமானத்தின் சக்கரங்கள் கழன்று விழுந்தது.இதனைத்தொடர்ந்து,மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த கொரோனா நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமானத்தின் சக்கரங்கள் கழன்று விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…