ராணுவ வீரர்களை கௌரவபடுத்த முடிவு ! நிகழ்ச்சியை தயாரிக்கும் தோனி

  • நீண்ட நாட்களாக தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.
  • ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க தோனி முடிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை தல என்ற அது அஜித் .அதேபோல் விளையாட்டு துறையை பொருத்தவரை தல என்றால் அது தோனி மட்டும் தான்.அப்படி தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தோனியின் பெயர் ஏதாவது ஒரு போட்டியில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.ஏனென்றால் சமீபத்திய போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை.இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு பிறகு வேறு எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்க வில்லை.இதனால் தோனியின் ரசிகர்கள் சில முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்காததால் ஏமாற்றத்தில் இருந்தனர்.பின்னர் பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்டில்  கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்த நிலையில் 2 மாதங்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டார்.அங்கு தோனி பயிற்சி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு புது செய்தி ஓன்று வெளியாகியுள்ளது.

தான் ராணுவத்தில் கௌரவ  பொறுப்பில் உள்ள  நிலையில் அசோக் சக்ரா மற்றும் பரம்வீர் சக்ரா விருதுகளை பெற்றவர்களின் கதைகளை விவரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் தோனி. அவருடன் இணைந்து ஸ்டூடியோ நெக்ஸ்ட் ( StudioNEXT ) என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான திரைக்கதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,அடுத்த ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டுக்காக பணியாற்றும் வீரர்களின் பயணத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் தோனி இந்த  முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

8 mins ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

49 mins ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

1 hour ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

2 hours ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

2 hours ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

3 hours ago