ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!

ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!

ஒரே நேரத்தில் இரட்டை திருமணமாக தனது காதலியையும் பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் மணமேடையில் திருமணம் செய்த மத்திய பிரதேச இளைஞர்.

மத்திய பிரதேசத்தின் பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் யுகே, பெதுல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோடடோங்ரி தொகுதிக்குட்பட்ட கெரியா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தனது காதலியையும் தனது பெற்றோர் பார்த்த பெண்ணையும் மண்டபத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

ஏற்கனவே ஹோஷங்காபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின் அவரது பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்துள்ளதாகவும் கூறப்பட்டது. பின் இரு பெண்களும் இவருடன் சேர்ந்து வாழ சம்மதித்தால் இருவரையும் ஒரே நேரத்தில் 3 குடும்பங்கள் முன்னிலையில் இரு பெண் வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube