திமுகவில் முக்கிய பொறுப்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கி வைத்த துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.!

இன்று திமுகவின் சுற்றுசூழல் அணிக்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணலை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தொடங்கி வைத்தார்.  

திமுகவின் துணை பொதுச்செயலாளராக  சிறப்பாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி எம்.பி, கனிமொழி கருணாநிதி  அவர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு பணிகள் மற்றும் அரசியல் பணிகளையும், தங்கள் கட்சி பணிகளையும் கவனித்து வருகிறார்.

அவருக்கு கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, மகளிர் அணி. மகளிர் தொண்டரணி ஆகிய பிரிவுகளின் பொறுப்பாளர் எனும் பொறுப்புகளும் கடந்த மதம் டிசம்பர் 28ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களால் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, திமுகவின் சுற்றுசூழல் அணிக்கு பொறுப்பாளர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் நிகழ்வை இன்று  கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். இந்த நேர்காணலில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் துணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நேர்காணல், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்த நேர்காணலூக்காக வைக்கப்பட்ட பதாகையில், சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளரான கனிமொழி அவர்களில் புகைப்படம் இடம்பெறவில்லை, ஆனால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் உள்ளது. இதனை கனிமொழி பொருட்படுத்தாமல், திராவிட முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நேர்காணலில் பங்கேற்றார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment