பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எம்.பி.கனிமொழி…!

பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எம்.பி.கனிமொழி.

டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எம்.பி.கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘டோக்கியோவில் நடக்கவிருக்கும், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் வாழ்த்துகள். கடந்த 2016 ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.