விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் -செல்லூர் ராஜூ!

தமிழகத்தில் விரைவில் நகரம் ரேஷன் கடைகள் அறிமுகப்படுத்தப்படும் என செல்லூர் ராஜூ அறிவிப்பு.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் இனிவரும் நாட்களில் எடுக்கவேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கூட்டுறவுத்துறை அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்தோம்.
கூட்டுறவு வங்கிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை தீட்டியுள்ளோம். விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் கொடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு இல்லை, ஆனால் விவசாயிகளுக்கு பயிர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கொடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் 3501 ரேஷன் கடைகள் தற்போது உள்ளது. இன்னும் ஆய்வு செய்து விரைவில் நகரும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் தொடங்கப்படும். சென்னையில் 400 நகரும் ரேஷன் கடைகள் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
author avatar
Rebekal