நண்பரின் மறைவுக்கு இரங்கல் – நடிகர் சிரஞ்சீவி.!

நண்பரின் மறைவுக்கு இரங்கல் – நடிகர் சிரஞ்சீவி.!

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவி, எனது நண்பரான ரிஷி ஜி இனி இல்லை என்பது பேரழிவு. ஒரு சிறந்த நண்பர், ஒரு சிறந்த கலைஞர் மில்லியன் கணக்கானவர்களின் இதயத்துடிப்பு. இந்த இழப்பை அறிந்து என் மனம் உடைந்தது . அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

Join our channel google news Youtube