14ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து..!

14ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து..!

வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மேலும் 3 இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால் வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7-ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 14-ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லாறு – ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே 3 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

author avatar
murugan
Join our channel google news Youtube