சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணி…!!!

  • சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது .
  • அனைத்து மாவட்டங்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னையில் பாஜகாவினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டனர். மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்,இந்த இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தமிழிசை செளந்தரராஜன் துவக்கி வைத்தார்.

இந்த பேரணியை துவக்கி வைத்து, பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் சாதகமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக திங்கட்கிழமை இறுதி செய்யப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment