தாயாரின் மரண தண்டனையை குறைக்க வேண்டும் – தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்ற பெண்ணின் மகன்!

குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்த நிலையில், இந்த சம்பவத்தின் அடிப்படையில் இவருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கியிருந்த இந்த தீர்ப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், இவருக்கு மதுராவில் உள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான நாள் தெரிவிக்கப்படாவிட்டாலும், தூக்கு கயிறு பீகாரில் இருந்து வரவழைக்கப்பட்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் தூக்கு தண்டனை பெற்ற முதல் பெண்மணி  இவர்தான் என பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தூக்கு தண்டனை பெற்றுள்ள ஷப்னமின் மகன் முஹம்மது தாஜ், தனது தாயாருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தீர்ப்பை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது தாயாரை தான் மிகவும் நேசிப்பதாகவும் எனவே ஜனாதிபதிக்கு தான் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது தனது தாயின் மரண தண்டனை குறைக்கப்பட்டு, தாயாருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென சிறுவன் முகமது தாஜ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னமும் தனது மரண தண்டனையை குறைக்க வேண்டுமென உத்திரப்பிரதேச மாநில கவர்னருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

4 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

5 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

6 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

7 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

7 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

8 hours ago