அன்பின் ஆதாரமான உலக அன்னையர் தினம் இன்று…

தாய்மை என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது ஆகும். உலகின்  மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும் தாயிற்ச் சிறந்த கோவிலும் இல்லை என நம் பண்டைய இலக்கியங்களில் அன்னை தான்  இவ்வுலகின் முதல் கடவுள். அன்னைதான் அனைத்துக்கும்அடிப்படையானவள்.அவள் இல்லையெனில்,நாம் இந்த மண்ணில்அவதரித்திருக்க முடியாது என்று கூறுகிறது. நம் அன்னையானவல் நமக்கு அன்னையாக மட்டுமல்லாமல் நல்ல சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும்
பாட்டியாக,அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும்ஆசானாக, ஆசிரியராக, வாழ வழிகாட்டியக, தோல்வியில் துவலும் போது தன்னம்பிக்கை அளிப்பவராகவும், நம்மை பற்றிய அனுதினமும் சிந்திப்பவரும்  உறவுமுறைகளில்  பெண் என்பவள் மனிதனின் வாழ்நாளில் எத்தனையோ உற்களில் வலம்வந்தாலும், அன்னை என்ற ஊர் உன்னத உறவே  உயரியது . உலகில் ஈடு இணையற்றது அன்னை. அன்னையே முதல் தெய்வம்.

அன்னையர் தின வரலாறு:

பண்டைய கிரீஸ் நாட்டில்  ‘ரியா’ என்ற கடவுளைத் அங்குள்ள மக்கள் தாயாக வழிபட்டனர். இதேபோல்  ரோமிலும், ‘சிபெல்லா’ என்ற பெண் கடவுளை, அன்னையாக வழிபட்டனர். நவீன அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது  ஞாயிற்று கிழமை  அன்னையர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதன்பின்  இதை இந்தியா, ஜெர்மனி
உள்ளிட்ட70 க்கும் மேற்பட்ட நாடுகள் பின்பற்றுகின்றன.

எனவே இன்று நம்மை ஈன்று சமுகத்தில் நடமாட காரணமான, நமது முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் நம் அன்னைகளின் ஆசிர்வாதங்களை பெற வேண்டியது அவசிமான செயல்களில் ஒன்றாகும். முதுமையில் தாயை கவனிக்காத பிள்ளை நிச்சையமாக அவைகளின் கர்ம பலனை அடைந்து அணுஅணூவாக அவதிப்பட்டு உயிர் துறப்பர் என்பது வழக்கு. எனவே இல்லாத காலத்தில் தாயை நினைத்து வருந்துவதை விட இருக்கும் காலத்தில் தாயை அன்புடன் கவனித்து, மனம் திறந்து பேசுவதே உசிதமாகும். அனைவருக்கும் தினச்சுவடின் அன்னையர் தின வாழ்த்துக்கள்…… 

author avatar
Kaliraj