தன் குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்.! பரிதபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.!

  • பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • இதனால் மனமுடைந்த மனைவி, கிணற்றுக்குள் குழந்தையை போட்டுவிட்டு அவரும் தற்கொலை முயற்சி, குழந்தை உயிரிழந்தது, தாய் உயிர் தப்பினார்.

பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரியலூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற அன்பரசி, அங்கு 5 வயதான முதல் பெண் குழந்தை தனுஷ்காவை விட்டுவிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பின்னர் அங்கு சென்ற அன்பரசி, வழக்கம் போல் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி அன்பரசி, வீட்டு பின்புறத்தில் உள்ள கிணற்றுக்குள், அவரது 1 வயது இரண்டாவது குழந்தையான மேகாஸ்ரீயை தூக்கி போட்டுவிட்டு, அவரும் பின் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திடீரெனெ சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருப்பவர்கள், அன்பரசியை உயிருடன் மீட்டனர். ஆனால், குழந்தை மேகாஸ்ரீயை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், குழந்தையை சடலமாக மீட்டனர், இதனால் இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்