ரஷ்யாவில் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்ததால் பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
ரஷ்யாவில் 25 வயதுடைய வோல்கா பஜிராவோ என்ற பெண், கணவரிடமிருந்து பிரிந்து தன் 2 குழந்தைகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். வோல்கா நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 4 நாட்கள் குழந்தைகளை பட்டினியாக்கியுள்ளார். இவருக்கு 11 மாத செவாலி என்ற மகனும், 3 வயது மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் வீட்டில் வைத்து பூட்டி சிறையிட்டுள்ளார்.
விருந்தை முடித்து திரும்பிய வோல்கா, வீட்டில் இருந்த தொட்டிலில் பட்டினியால் 11 மாத குழந்தை இறந்ததை பார்த்துள்ளார். 3 வயது மகளும் பசியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை பார்த்து மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரஷ்ய நீதிமன்றத்தில் வோல்கா தனக்கு குழந்தைகளை கொல்லும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், ரஷ்ய நீதிமன்றம் குழந்தையை கொன்றதற்காகவும், தாயின் கடமையை செய்ய தவறியதற்கும் வோல்காவை குற்றவாளி என்று தீர்ப்பளித்து வோல்காவிற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
Vijay : சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து விஜய் வாக்கு செலுத்தினார். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
Election2024 : வாக்களிக்க தாமதமாவதாக தென் சென்னை வாக்காளர்கள் பாஜக வேட்பாளர் தமிழிசையையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல்…
Election2024 : காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 23.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் இன்று 102 தொகுதிகளில்…
Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம். இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும்…
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை…