நேருக்கு நேர் தேர்தலில் மோதும் மாமியார், மருமகள்..!

நேருக்கு நேர் தேர்தலில் மோதும் மாமியார், மருமகள்..!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். பொதுவாக தேர்தல் நடைபெறும்போது சில சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். அதில் ஓன்று ஒரே குடும்பத்தை சார்ந்த இருவர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவார்கள்.

இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் இருவரும் அவர்கள் கணவருடன் வந்து ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube