எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது என நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் தலைமையில் குழு இன்று சமர்ப்பித்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்து முதல்வரிடம் 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.
எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன்வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வால் அரசுப்பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 80 ஆயிரத்திற்கு அதிகமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ளவேண்டும். உளவியல், பொருளாதாரம், சமூகநீதி, சட்டபிரச்சனை என நிறைய உள்ளன. அனைத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். நீட் என்பது தேர்வு மட்டும் இல்லை தமிழர்களின் உரிமை,வாழ்வாதாரம் தொடர்புடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதனிடையே, நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…