18-44 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி…! கடந்த 24 மணி நேரத்தில் 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்….!

கடந்த 24 மணி நேரத்தில் 18-44 வயதுக்குட்பட்ட 2.15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். 

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது.

இந்தியாவில் தினசரி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிற நிலையில், மே-1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 2,15,185 பேர், கடந்த 24 மணி நேரத்தில் முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குஜராத் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில்  ஒட்டுமொத்தமாக செலுத்திக் கொண்டனர். குஜராத் -1,08,188 , ராஜஸ்தான் – 75,817, மகாராஷ்டிரா – 73,455, ஹரியானா  54,946, சத்தீஸ்கர்- 1,025, டெல்லி – 39,799, ஹரியானா – 54,946, ஜம்மு-காஷ்மீர் – 5,562, கர்நாடகா – 2,353, ஒடிசா – 6,311, பஞ்சாப் – 635, தமிழ்நாடு – 2,521, மற்றும் உத்தரப்பிரதேசம் 33,242 தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.  நாடு முழுவதும், 15,88,71,435 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில்,  டெல்லி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், பீகார், ராஜஸ்தான், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், தினசரி நோய்தொற்று அதிகரித்து வருகிறது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

100 மிஸ்டு கால்… பதறிய காதலன்.. ‘லவ் பிரைன்’ நோய் பாதித்த இளம்பெண்.!

Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை  சீனாவில்…

9 mins ago

என்னா அடி! கடவுளுக்கு நன்றி ஹைதராபாத் கூட விளையாடல…மிரண்ட வாசிம் அக்ரம் !

Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

14 mins ago

கடும் வெயில் தாக்கம்… மேடையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!

Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…

32 mins ago

கோடாக் மஹிந்திரா வங்கி மீது நடவடிக்கை.. இவற்றுக்கெல்லாம் தடை விதித்த ஆர்பிஐ!

RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…

46 mins ago

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

1 hour ago

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…

1 hour ago