குரங்கு காய்ச்சல் : தனிமைப்படுத்துதல் கட்டாயம் – எந்த நாட்டில் தெரியுமா..?

குரங்கு காய்ச்சல் : தனிமைப்படுத்துதல் கட்டாயம் – எந்த நாட்டில் தெரியுமா..?

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.

இந்த தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட 9 நாடுகளில் மிகப்பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் 3 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெல்ஜியம் நாட்டில் தான் முதல் முறையாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *