ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணியுங்கள் – நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணியுங்கள் – நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்

K. Annamalai

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை வங்கிகள் கண்காணிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்த கோரி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடாக சம்பாதித்த ரூ.2000 நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக்கில் மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். நேற்று ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும், இந்த நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்.30 தேதி வரை, தினமும் ரூ.20,000 வரை வங்கிகளில் மாற்றலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube