ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் – மோகன் பகவத் 

ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று  சலப்புரத்தில் ‘கேசரி ஊடக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில், 1951-ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கிய சங்க பரிவார் இணைந்த வார இதழான ‘கேசரி’ என்பது “பாரதத்தின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட” சில எண்ணங்களின் கூற்று என தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில் ‘கேசரி’ பயணம் வசதியானதல்ல என்றும் இந்த உண்மையை தற்போதைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.

‘கேசரி’ நோக்கம் ‘தரமத்தின் வழியை நிறுவுவதாகும்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், சில வெற்றிகளை நாம் அடைந்தாலும் பரவாயில்லை, தர்மத்தின் வழியை நிறுவுவதே கேசரியின் நோக்கம். எல்லா முரண்பாடுகளுக்கும் மத்தியிலும், தர்மத்தை அடைய எங்கள் இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.