ராஜஸ்தானில் “அமைதி சிலை” திறந்து வைக்கும் மோடி..!

சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் 151 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் “அமைதி சிலை” வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இந்தச் சிலை அமைக்கப்படவுள்ளது. இவர் 1870-1954 காலப்பகுதியில் வாழ்ந்த துறவி, 151 அங்குல உயரமுள்ள இந்த சிலை எட்டு உலோகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

வெகுஜன நலனுக்காகவும், கல்வியின் பரவலுக்காகவும், சமூக தீமைகளை ஒழிப்பதற்காகவும் இவர் அயராது உழைத்தார், எழுச்சியூட்டும் இலக்கியங்களை எழுதியுள்ளார். மேலும், சுதந்திர இயக்கத்திற்கும், சுதேசியின் காரணத்திற்கும் தீவிரமான ஆதரவை வழங்கினார்.

அவரது உத்வேகத்துடன், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆய்வு மையங்கள் உட்பட 50 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.

author avatar
murugan

Leave a Comment