,
Mallikarjun Kharge

பிரதமர் மோடி எதிர்கட்சிகளை கண்டு பயப்படுகிறார் – மல்லிகார்ஜுன கார்கே

By

எதிர்கட்சிகளை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று எதிரிக்கட்சிகள் கூட்டத்துக்கு பின் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி.

கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேற்றும், இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

“INDIA” கூட்டணி :

எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 பாஜக அச்சம்:

மேலும், 3வது எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையிலும், 4வது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டாக சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “INDIA” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. அனைத்து அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் மீது ஆயுதமாக ஏவுகிறது மத்திய பாஜக அரசு. ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் காப்பதற்கு இன்றைய கூட்டம் மிகவும் முக்கியமானது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பு குழு:

மக்கள் நலனை காப்பதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்போம். எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் 11 பேர் யார் என்பது முடிவு எடுக்கப்படும்.

38 கட்சிகள் எங்கே ?

நாட்டின் ஜநாயகம், அரசியமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக துடிக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும். மக்கள் நலனுக்காக பல்வேறு பரிந்துரைகளை தலைவர்கள் கொடுத்துள்ளார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றதை அடுத்து பாஜக 38 கட்சிகள் கூட்டத்தை கூட்டியுள்ளது. பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் எங்கே இருக்கிறது  என்று தெரியவில்லை. பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதா எனவும் தெரியவில்லை.

மக்களிடம் எடுத்து செல்வோம்:

எதிர்க்கட்சிகள் அணியில் சேர்ந்துள்ளவர்கள் ஜனநாயகத்தை காக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உறுதி கொண்டர்வர்கள். பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்து செல்வோம். கூட்டணி ஒருமித்த கருத்துடன் பெயர் வைத்ததே எங்களின் முதல் சாதனை. பாஜக கூட்டணியில் மோடியின் கண் அசைவு இல்லாமல் யாரும் அசையக்கூடாது. எனவே எதிர்கட்சிகளை கண்டு பயப்படுகிறார் மோடி.

பாஜக ஆட்சியால் சிறு, குறு தொழில் முனைவோர், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் மூலம் நிவாரணம் கிடைக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கட்சி கூட்டணி மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.