400 கோடி செலவில் அயோத்தியில் நவீன பஸ் நிலையம் – உத்தர பிரதேச மந்திரிசபை ஒப்புதல்!

  • அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
  • அங்கு 400 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் அமைக்க உத்திரப்பிரதேச மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அவர்கள் தலைமையில் மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மந்திரிசபை கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் அருகில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் அவர்கள், அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தொலை தூரங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே இதை மனதில் வைத்து அயோத்தியில் 400 கோடி செலவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் கட்டும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு 400 கோடி ரூபாய் பண்பாட்டுத் துறையில் இருந்து போக்குவரத்து துறைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் எனவும், இந்த பேருந்து நிலையத்திலிருந்து அயோத்தி மற்றும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், அயோத்தி சுல்தான்பூர் இடையில் நான்கு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த நான்கு வழி சாலைக்காக 20 கோடிக்கு மேல் செலவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.! 

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

1 hour ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

1 hour ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

2 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

9 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

11 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

13 hours ago