தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் அதிகாலை முதலே ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, தற்போது, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.