அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புகார்

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது . கமல் மீது வன்முறையை தூண்டும் வகையில் செய்திகளை பரப்பியதாக, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment