இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே! மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மக்களவை தேர்தல் நிறைவடையும் தருவாயில் உள்ளதால் கட்சி தலைவர்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். பிரதான தேசிய கட்சிகளுக்கு சிலர் ஆதரவளித்தாலும், சில கட்சி தலைவர்கள் மூன்றாவது அணியை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்துவிட்டு சென்றுள்ளார். இது குறித்து பல கட்சி தலைவர்கள் ஸ்டாலின் மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுக்கு உள்ளார் என கூறிவருகின்றனர்.

தற்போது இந்த சந்திப்பு குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே ‘ என தெளிவு படுத்தியுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment