“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” -பிரச்சாரத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”  பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கி உள்ளது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளார்.காலை மாலை என 30 நாட்களுக்கு உங்கள் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனையை கேட்டு அறியப்படும் என்றும் விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித் தந்தால் 100 நாள்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.