மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு

மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு

மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையக்கூட்டம் வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை சுவிஸ்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில்  மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  ஆனால் திமுக தரப்பில் இன்னும் ஸ்டாலின் பங்கேற்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

 

Join our channel google news Youtube