MIvsRCB: சிக்ஸர்களை பறக்கவிட்ட டு பிளெசிஸ், மேக்ஸ்வெல்..! மும்பை அணிக்கு வலுவான இலக்கு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RCB போட்டியில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 199/6 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி ஒற்றை இழக்க ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் அவருடன் இணைந்து களமிறங்கிய டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, சிறுது நேரத்தில் க்ரீன் வீசிய பந்தில் டு பிளெசிஸும் தனது விக்கெட்டை இழந்தார். இவர்களையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 68 ரன்களும், டு பிளெசிஸ் 65 ரன்களும், தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் ஜேசன் தனது பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.