#MIvPBKS: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? .. 136 ரன்கள் அடித்தால் வெற்றி!

மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் 2வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மன்தீப் சிங் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் வெளியேறினார். இதன்பின் மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டை இழந்தனர்.

இந்த சமயத்தில் ஐடன் மார்க்ரம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி வந்த நிலையில், மார்க்ரம் 42 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து தீபக் ஹூடாவும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.

136 ரன்கள் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் தங்களது முதல் வெற்றியை பதிவும் செய்யும். மும்பை பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க மின்னல் வேகத்தில் இருக்கும்!!

Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…

34 mins ago

அடுத்த அடி இன்னும் உக்கரமாக இருக்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…

39 mins ago

அதீத ஹெட்போன் பயன்பாடு..! 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு !!

WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…

42 mins ago

மீனாட்சி திருக்கல்யாணம் 2024.! தீர்க்க சுமங்கலி வரம் தரும் மீனாட்சியம்மன்.!

மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…

57 mins ago

தமிழ்நாட்டில் செங்கல்.. கர்நாடகாவில் சொம்பு.! பிரச்சார களேபரங்கள்…

Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…

2 hours ago

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…

2 hours ago