30 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் நிகழ்ந்த ‘அற்புதம்’ ..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகள் உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி மூலம் இந்திய அணி 30 ஆண்டுகளுக்குப் பின் அற்புதம் ஓன்று நிகழ்ந்துள்ளது. அதுஎன்னவென்றால் டெஸ்ட் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இந்திய அணி அதிக ஓவர்களில் விளையாடி சாதனை படைத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி 131 ஓவர் விளையாடியுள்ளது.

இதற்கு முன் 1979-ஆம் இங்கிலாந்து அணியுடன் ஓவல் மைதானத்தில் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 150.5 ஓவர் விளையாடியுள்ளது. மேலும் அதே ஆண்டில் டெல்லியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போது இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் 131 ஓவர் விளையாடியுள்ளது. இதனால், 30 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 4-வது இன்னிங்ஸில் அதிக ஓவர்கள் விளையாடிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan