நாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சராகம் எச்சரிக்கை
நாளை பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சராகம் எச்சரிக்கை
மக்களவை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நிறைவடைந்து விட்டது. விடிந்தால் யார் நமது நாட்டின் பிரதமர் என வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தொடங்கிவிடுவோம் நாம். விறு விறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனைத்து கட்சிகளும் வாக்கு எண்ணிக்கை மையத்தை முற்றுகையிட தற்போதே தொடங்கிவிட்டன.
இதனால் அநேக இடங்களில் வன்முறை வெடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதனால், நாளை வாக்கு எண்ணிக்கையின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க மாநில உள்துறை செயலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
DINASUVADU