துணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை

துணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.நாளை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி  அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.மேலும் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.தற்போது பன்னீர்செல்வத்துடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில் அமைச்சர்கள் முதலமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு சென்று அங்கு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.