வேலைக்கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி..!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்திக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி. 

பெரம்பலூரை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி. இவர் அமைச்சர் உதயநிதி அவர்களிடம், தனது குடும்ப சூழலை எடுத்துக் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு அளிக்குமாறு கோரினார்.

மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் பணி வழங்க ஆணையிட்டார். அதன்படி, இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாப்பாத்திக்கு வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.