மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்…! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்…!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்…! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்…!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள். 

பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினரின் படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் அமைச்சர் வெள்ளைப் பகுதியில் சிக்கிக் கொண்டார். இதனை எடுத்து ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் விரைந்து உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்டனர். மேலும் மீட்பு குழுவினரையும் மீட்டெடுத்தனர். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்புப் படையினர் மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Stuck in flood hit village, where he went on boat to rescue villagers, MP home minister Narottam Mishra airlifted by IAF copter. Cong dubs it minister’s unwanted attempt to turn ‘Spiderman.’ @NewIndianXpress@TheMornStandard@khogensingh1@gsvasu_TNIEhttps://t.co/G4conSJYP6

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube