கபடி விளையாடி மக்களை கலகலக்க வைத்த அமைச்சர் ஜெயக்குமார்…!

கபடி விளையாடி மக்களை கலகலக்க வைத்த அமைச்சர் ஜெயக்குமார்…!

சென்னை ராயபுரம் ராபின்சன் மைதானத்தில், வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்.  

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், அமைச்சர் ஜெயக்குமார், பரப்புரையில் ஈடுபட்டார்.

அவர் பிரச்சாரத்திற்கு முடித்துவிட்டு திரும்பும் போது, ராபின்சன் மைதானத்தில் கபடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், வீரர்காளுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து கபடி  விளையாடினார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த செயலை கண்ட மக்கள் ஆச்சரியத்தில் வியந்து பார்த்ததுடன், ஆரவாரத்துடன் கரவோசை எழுப்பினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube