#CORONABREAKING: அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா..!

அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு அதிகமாக இந்தியாவில் பரவி வருகிறது.

இந்த தொற்று காரணமாக பல அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் சி.வி சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

author avatar
murugan