அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என  தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்னேனே தவிர, அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறவில்லை என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment