பெண் ஊழியருடன் பல வருடங்கள் பாலியல் தொடர்பு- பில் கேட்ஸ் மீது விசாரணை..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து விசாரணை நடத்த மைக்ரோசாப்ட் போர்டு அமைப்பினர்,சட்ட நிறுவனம் ஒன்றை 2019-ம் ஆண்டு நியமித்தனர்.

ஆனால்,மைக்ரோசாப்ட் நடத்திய இந்த விசாரணை முடிவதற்கு முன்பே பில் கேட்ஸ் போர்டிலிருந்து விலகினார்.அதன்பின்னர்,மைக்ரோசாப்ட் போர்டு உறுப்பினர்கள் கடந்த 2020ம் ஆண்டு இதுகுறித்து கூறியதாவது, “மைக்ரோசாப்ட் போர்டில் பில் கேட்ஸ் நீடிக்கத் தகுதியற்றவர்,ஏனெனில் மைக்ரோசாப்ட் பெண் ஊழியருடன் பில் கேட்ஸ் வைத்திருந்த உறவு முறையானதல்ல”, என்று கூறியதாக வால்ஸ்ட்ரீட் இதழ் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,இதுகுறித்து பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வால்ஸ்ட்ரீட் செய்தி நிறுவனத்திடம்,20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே உறவு இருந்ததாக தெரிவித்தார்.

மேலும்,பில் கேட்ஸின் இத்தகைய உறவுகள் குறித்து நியூயார்க் டைம்ஸ் இதழும் சில விவரங்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,பில் கேட்ஸுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்படும் ஜெப்ரி எட்வர்ட்,அமெரிக்காவில் நிதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்தார்.எனினும்,பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார்.மேலும்,பெண் குழந்தைகளை வைத்து மிகப் பெரிய பாலியல் ‘நெட்வொர்க்’ நடத்தி வந்ததாக ஜெப்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.இதனையடுத்து,வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,சிறையில் இருந்த நிலையில் ஜெப்ரி உயிரிழந்தார்.

இருப்பினும்,பில் கேட்ஸ் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும்,மே மாத தொடக்கத்தில்,பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் திருமணமாகி 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.ஆனால்,உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

3 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

5 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

6 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

6 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

7 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

7 hours ago