யுவ்ராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம் வீண்!! 37 ரன்கள் வித்யாசத்தில் சொந்த மண்ணில் தோற்றது மும்பை இந்தியன்ஸ்!!

  • மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அற்புதமாக ஆடி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியின் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.

அதனையடுத்து 214 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே கடுமையாக சொதப்பியது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களுடனும் களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக அடிக்கவில்லை. யுவராஜ் சிங் மற்றும் 35 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்தார். பின்னர் மும்பை அணி 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

author avatar
Srimahath

Leave a Comment