எம்ஜிஆருக்கு தன் கிட்னியை தானமாக கொடுத்த எம்ஜிஆரின் அண்ணன் மகள் காலமானார்..!

எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நாளிதழில் பார்த்த லீலாவதி அவர்கள் தனக்கு திருமணம் ஆகியிருந்தாலும் தனது கணவனின் அனுமதியுடன் அவரது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரகம்  தானம் செய்ய முன்வந்தார்.

அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட நிலையில், லீலாவதியின் சிறுநீரகம் எம்ஜிஆர் அவர்களுக்கு பொருத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எம்ஜிஆருக்கு சிறுநீரகத்தை தானம் செய்த லீலாவதி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.