Unlock 4.0: செப். 7 முதல் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி!

Unlock 4.0: செப். 7 முதல் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி!

செப். 7- ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களுக்கான சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 31- ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதில் மெட்ரோ ரயில் சேவை செப். 7- ம் தேதி முதல் தொடங்கும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube