MeToo இயக்கத்தை கொச்சைப் படுத்தியதாக குற்றச்சாட்டு – நடிகை பிரீத்தி ஜிந்தா மறுப்பு..!!

நடிகை பிரீத்தி ஜிந்தா MeeToo இயக்கத்தை கொச்சைப் படுத்தியதாக சமூக வலைதளங்களில் metoo ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.ஆனால் இதற்கு பிரீத்தி ஜிந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களாக metoo இயக்கம் இந்தியாவில் வேகம் பிடித்துள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல பெண்கள் புகார் செய்தனர். இந்நிலையில், இணைய தளத்துக்கு பேட்டி அளித்த பிரீத்தி ஜிந்தாவிடம் , “நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர், நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறீர்களோ, அப்படி நடத்தப்படுவீர்கள்” என்று கூறினார். இதனால், metoo ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.ஆனால் தான் கூறியதை தவறாக எடிட் செய்து விட்டனர் என்று ஜிந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment