3 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுடன் பழகும் முறைகள்

3 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளுடன் பழகும் முறைகள்

குழந்தைகள் தான் நமது பொக்கிஷம். குழந்தைகளுடன் நாம் இருக்கும் நேரங்கள் நமது வாழ்வின் பொன்னான தருணங்கள்.குழந்தைகளின் சந்தோஷத்திற்காக தான் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறோம். அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறோம். அவர்களுக்கு எந்த விதமான துன்பங்களும் வந்து விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்தி வருகிறோம்.

குழந்தைகளுடன் பழகும் சில முறைகள்:

நாம் குழந்தைகளுடன் சிறு வயதில் இருந்து நண்பன் போல பழக வேண்டும்.அவ்வாறு பழகினால் தான் அவர்கள் நம்மிடம் இருந்து எந்த ஒரு விஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். எனவே தற்போதைய கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க அவர்களுடன் நாம் விளையாடுவதையும், உரையாடுவதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தைக்கு சிறந்த பொம்மை நீங்கள், அவர்களுடன் எப்படி பழகுவது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

முகம் :

குழந்தைகளிடம் ராஸ்பெர்ரி  , உங்கள் நாக்கை மூடி, முகத்தை காட்டி விளையாடுங்கள் அல்லது பீகாபூ என்ற விளையாட்டை முயற்சிக்கவும். குழந்தைகள் அதிக அளவில் முகம் நேசிக்கிறார்கள், உங்கள் குழந்தையுடன் விளையாடுவதற்கு இது நல்ல வழி.  உங்கள் முகத்தின் பல்வேறு பாகங்களைத் தொடுவதையும், அவர்களின் தொடுதலை நீங்கள் தொடுவதையும் குழந்தைகள் விரும்புகிறார்கள்.எனவே இந்த வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளுடன் விளையாடலாம்.

சத்தத்தை உணர்த்துங்கள் :

 

 

குழந்தைக்குடன் விளையாடும்  போது அவர்களுக்கு பல பொருட்களை பயன் படுத்தி சத்தை உணர்த்துங்கள்.

குழந்தைகளின் முன்பு மணியை பயன்படுத்தி ஒளியை எழுப்பப் முயலுங்கள்.இது அவர்களின் கேட்கும் திறமையை அதிகரிக்க உதவியாக இருக்கும். இதனால் அவர்களின் கவனிக்கும் திறமைகளும் வளரும்.

தொடுதல் :

 

தொடுதல் விளையாட்டின் மூலம் உங்கள் குழந்தைக்கு பல்வேறு விஷயங்களைத் தெரிவிக்கலாம். குழந்தைகளுக்கு மென்மையான மற்றும் கடினமான பொருட்களை விளையாடின்  மூலம் தெரியப்படுத்தலாம்.

உதாரணமாக  மென்மையான-தோலுரித்த ஆப்பிள்கள், கரடுமுரடான பொம்மைகள் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு தொடுதல் தொடர்பான உணர்வுகளை ஏற்படுத்தலாம். ஐஸ் குய்ப்பை தொட்டால் அவர்களின் உணர்வு எவ்வாறு இருக்கிறது எனக்கண்டறியலாம்.

பாடல் :

 

குழந்தைகளின் முன்பு  அவர்களின் முன்பு மென்மையாகவும் , மற்றும் சத்தமாகவும் பாடல்களை பாடுங்கள்.அதற்கு பிறகு பாடல்களை வேகமாகவும் ,மெதுவாகவும் பாடுங்கள். .

‘ட்விங்கிள், ட்விங்கிள்,  போன்ற அக்க்ஷன் பாடல்களை பாடுங்கள். செயல்கள் அல்லது தொடர்பைக் கொண்டிருக்கும் பாடல்கள் குழந்தைகளை மிகவும் கவரும். இந்த பாடல்களை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள்.

குழந்தையுடன் உரையாடல்:

நாம் நமது குழந்தையுடன் குழந்தையுடன்  நாள்தோரும் உரையாட வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள் இவ்வாறு நாம் செய்யும் பொது மிகவும் விரைவாக பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

 

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *