மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திப்பு…!

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பேசினார்.

இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதமாக உள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய  ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மேகதாது அணை கட்டப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.