ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்கமாஸ்க் அணிந்து வலம் வரும் மனிதர்..!

உத்தரபிரதேசத்தில் ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்க மாஸ்க்கை அணிந்து வலம் வருகிறார் மனோஜ் ஆனந்த் என்பவர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்கது. இதனால் முகக்கவசம் என்பது மக்களுக்கு முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

அதன்படி, உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர் தங்கத்தால் ஆன முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்துகிறார். இவர் கான்பூர் நகரை சேர்ந்தவர். தங்கத்தின் மீது விருப்பம் கொண்ட காரணத்தால் இவருக்காக ரூ.5 லட்ச மதிப்பில் தங்க முகக்கவசத்தை தயாரிக்க கூறி அதை அணிந்து கொண்டு வலம் வருகிறார். அந்த ஊரில் இருப்பவர்கள் இவரை கோல்டன் பாபா என்றே அழைக்கிறார்கள்.