முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட.
கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் குணமாகும் நோய்களை பற்றியும் பார்ப்போம்.
இந்த கீரை ஆஸ்துமா நோயை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த கீரையை தினமும் நமது உணவில் சேர்த்து கொண்டால் ஆஸ்துமா நோயில் இருந்து விடுதலை பெறலாம். நாளடைவில் இந்த நோயில் இருந்து முழுவதுமாக விடுதலை அடையலாம்.
முசுமுசுக்கை கீரை சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இந்த கீரை உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கீரை இருமல் மற்றும் சளியை போக்கி ஆரோக்கியத்தை அளிக்கிறது.
காசநோய் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர பூரண சுகம் பெறலாம். இந்த கீரையை மட்டுமல்லாது இதன் கிழங்கையும் காச நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். காச நோய் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணமாக்குகிறது.
முசுமுசுக்கை கீரை கண் எரிச்சலை குணமாக்குகிறது. இந்த இலையின் சாற்றை எடுத்து, நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும். இது கண்ணெரிச்சல் மட்டுமல்லாமல் உடல் எரிச்சலையும் குணமாக்குகிறது.
முசுமுசுக்கை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டம் சரியாக இயங்க உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்கிறது.
இது சுவாச பிரச்சனைகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…