#BREAKING: கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை.! சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.!

தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இருவருரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, சிபிசிஐடி 12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில், தற்போது ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதனால், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின் கைதானவர்கள் நீதிமன்றம் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

author avatar
murugan