எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளர் இன்று மாரடைப்பால் காலமானார்.!

எம்டிஎச் மசாலா நிறுவன உரிமையாளரான தரம்பல் குலாட்டி இன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

உலகின் மிக புகழ்பெற்ற மசாலா பிராண்டான எம்.டி.எச் மசாலாவின் உரிமையாளர் மகாஷே தரம்பல் குலாட்டி . கடந்த 3 வாரமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தரம்பல் குலாட்டி இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .இவர் அதிகாலை 5.30 மணிக்கு கடைசியாக மூச்சு விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1923-ல் பாகிஸ்தானின் சியால்கோட்டில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தந்தையுடன் இணைந்து மசாலா தொழிலில் ஈடுபட்டார்.அதனையடுத்து 1947-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு , இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் முகாமில் தங்கி ,முதலில் தனது கடையை டெல்லியின் கரோல் பாக் நகரில் தொடங்கினார் . அதனையடுத்து எம்.டி.எச் மசாலா நிறுவனத்தை 1959-ல் தொடங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் .

இவரது இந்த நிறுவனம் இந்திய மசாலா பொருட்களை இங்கிலாந்து, ஐரோப்பா,யுஏஇ,கன்னடா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.அதன் மூலம் பிரபலமான தரம்பல் குலாட்டிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.தற்போது மாரடைப்பு காரணமாக காலமான மகாஷேய்ஜி என்று அன்புடன் அழைக்கப்படும் தரம்பல் குலாட்டிக்கு பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் ,தனது வாழ்க்கையை சமூகத்திற்காக அர்பணித்த தரம்பல் ஜி-யின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.அதே போன்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா காலமான தரம்பல் குலாட்டியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய தொழிலதிபர்களில் ஒருவரான தரம்பல் ஜி காலமான செய்தி கேட்டு வருத்தமடைந்ததாகவும் ,அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

23 mins ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

1 hour ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

1 hour ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 hour ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

2 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

2 hours ago