தமிழகத்தில் உதயமாகிறது மயிலாடுதுறை ! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று  துவக்கி வைக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையை தமிழகத்தின் 38வது மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பின்னர் மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று  காணொலி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.